Home 🎬 Bollywood 🎵 Pakistani 🎤 English Pop

Unakkul Naane

👤 Bombay Jayashri, Rohini 🎼 Patchai Kili Muthucharam ⏱️ 4:41
🎵 3162 characters
⏱️ 4:41 duration
🆔 ID: 5874744

📜 Lyrics

மின்னும் பனி சாரல் உன் நெஞ்சில் சேர்ந்தாளே.
கண்ணில் உன்னை வைத்து பெண் தைத்து கொண்டாளே.
வெண்ணிலா துவின் தன் காதல் சொன்னாளே.
மல்லிகை வாசம் உன் பேச்சில் கண்டாளே.
பொன் மான் இவளா.
உன் வானவில்லா பொன் மான் இவளா உன் வானவில்லா.

உனக்குள் நானே உருகும் இரவில் உள்ளத்தை நான் சொல்ல வா.
மருகும் மனதின் ரகசிய அறையில் ஒத்திகை பார்த்திட வா.
சிறுக சிறுக உன்னில் என்னை தொலைத்து மொழி சொல்ல வா.
சொல்லா சொல்லும் என்னை வாட்டும் ரணமும் தேன் அல்லவா!
உனக்குள் நானே உருகும் இரவில் உள்ளத்தை நான் சொல்லவா?

ஏதோ நம் பொய் வார்த்தையேதான் ஏன் அதில் உன் என் மௌனமே தான்.
உதட்டில் சிரிப்பை தந்தாய் மனதில் கனத்தை தந்தாய்.
ஒருமுறை உன்னை எனக்கென்று சுவாசிக்கவா.
மறுமுறை உன்னை புதிதாக சுவாசிக்கவா.
உனக்குள் நானே உருகும் இரவில் உள்ளத்தை நான் சொல்ல வா.
மருகும் மனதின் ரகசிய அறையில் ஒத்திகை பார்த்திடவா.

தீப்போல் தேன் போல் சலனமே தான் மதியினும் நிம்மதி சிதையவே தான்.
நிழலை விட்டு சென்றாயே நினைவை வெட்டி சென்றாயே.
இனியொரு பிறவி உன்னோடு வாழ்ந்திடவா.
அதுவரை என்னை காற்றோடு சேர்த்திடவா.

உனக்குள் நானே உருகும் இரவில் உள்ளத்தை நான் சொல்ல வா.
மருகும் மனதின் ரகசிய அறையில் ஒத்திகை பார்த்திடாவா.
சிறுக சிறுக உன்னில் என்னை தொலைத்து மொழி சொல்ல வா.
சொல்லா சொல்லும் என்னை வாட்டும் ரணமும் தேன் அல்லவா
ரணமும் தேன் அல்லவா
ரணமும் தேன் அல்லவா

⭐ Rate These Lyrics

Average: 0.0/5 • 0 ratings